search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன் கோவில்"

    • 5-ந் தேதி அதிகாலை சாமி திருத்தேருக்கு எழுந்தருளினார்.
    • மறுபூஜையுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த கருவலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அதிகாலை சாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் மாலை 4 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். சிறிது தூரம் தேர் இழுத்து நிறுத்தப்பட்டது.

    மீண்டும் கடந்த 6,7-ந் தேதிகளில் தேர் இழுக்–கப்–பட்டு நிலையை வந்தடைந்தது. இதையடுத்து தெப்பத்தேர், காமதேனு வாகனம், குதிரைவாகன உற்சவம் ஆகியவை நடந்தது. நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையடுத்து நாளை (புதன்கிழமை) சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்று மறுபூஜையுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    • மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நாளை தொடங்குகிறது.
    • வருகிற 15-ந் தேதி பால்குடம், தீச்சட்டி ஊர்வலம் நடக்கிறது.

    மதுரை

    மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இது மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்ததாகும். இந்த கோவிலில் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

    இந்த ஆண்டு பங்குனி திருவிழா நாளை 11-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி மாரியம்மன் இன்று (திங்கட்கிழமை) கோவிலில் இருந்து புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலை வந்த டைகிறார். அங்கு கோவிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும்.

    நாளை (11-ந்தேதி) மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி காட்சி அளிப்பார். அப்போது மீனாட்சி சுந்தரேசுவரரிடம் இருந்து கொடிபட்டத்தை பூசாரி பெற்று கொண்டு அவர் யானை மீது அமர்ந்து 4 சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து தெப்பக்குளம் கோவிலுக்கு சென்ற டைவார்.

    அங்கு இரவு 11மணிக்கு மேல் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெறும். அப்போது அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல், முளைப்பாரி முத்து பதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    5-ம் நாளான 15-ந்தேதி இரவு 7.25 மணிக்கு மேல் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்து வார்கள். அன்று மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து காட்சி அளிப்பார்.

    7-ம் நாளான 17-ந்தேதி திருவிளக்குபூஜையும், பங்குனி விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு 18-ந்தேதியும் நடக்கிறது. 19-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மேல் சட்டத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

    20-ந்தேதி காலை 6 மணி முதல் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். பின்னர் இரவு 7.25 மணிக்கு மேல் தீர்த்தவாரியுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது.

    • ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
    • சாலை சீரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலையில் அடையாளமாக விளங்கி வரும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியுள்ளது. விழாவின் சிறப்பம்சமான தேரோட்டம் வரும் 13-ந்தேதி நடைபெறவுள்ளது. தேரோட்டத்துக்கென ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேரின் வெள்ளோட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. 5 நிலைகளை கொண்ட புதிய தேர் உடுமலை நகர வீதிகளில் உலா வரும் கண்கொள்ளாக் காட்சியைக் காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இந்தநிலையில் தேரோடும் வீதிகளில் சாலைப்பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நகராட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சதாசிவம் வீதி, வடக்கு குட்டை வீதி, நெல்லுக்கடை வீதி உள்ளிட்ட தேரோடும் வீதிகளில் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் சாலை ஓரங்களில் மழை நீர் வடிகால் கட்டும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் அவற்றுக்கு கான்கிரீட் மூடி அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொள்ளாச்சி சாலையில் சாலை நடுவில் மையத்தடுப்புகளில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்களும் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் தேர்திருவிழாவில் தேரோட்டத்தை சிறப்பாக நடத்தும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • விநாயகர் கோவில் கிணற்றில் வைக்கப்பட்டிருந்த திருக்கம்பம் வெளியே எடுக்கப்பட்டது.
    • 6 ந் தேதி வாஸ்து சாந்தி, கிராம சாந்தி பூஜைகள் நடைபெறவுள்ளது.

    உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28 ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று இரவு கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சின்னவீர ன்பட்டியிலிருந்து கொண்டு வரப்பட்டு உடுமலை பஸ் நிலையம் அருகிலுள்ள சுந்தர விநாயகர் கோவில் கிணற்றில் வைக்க ப்பட்டிரு ந்த திருக்கம்பம் வெளியே எடுக்கப்பட்டது.பின்னர் மஞ்சள் பூசி செவ்வரளி, மல்லிகை, செண்பகம் உள்ளிட்ட மலர்களா ல் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும் அதனையடுத்து மேள தாளத்துடன் பக்தி கோஷங்கள் முழங்க ஊர்வலமாக திருக்கம்பம் மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் சன்னதியைச் சுற்றி வலம் வந்து கோவில் கொடி மரத்துக்கு முன் நடப்பட்டது.

    பின்னர் பூவோடு எடுத்து சன்னதியை 3 முறை வலம் வந்து கம்பத்தில் வைத்து கம்பத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் திருக்கம்பத்துக்கு பால், சந்தனம்,மஞ்சள் கலந்த நீர் உள்ளிட்ட புனித நீர் ஊற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தினசரி பக்தர்கள் திருக்கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்வார்கள்.மேலும் வரும் 6 ந் தேதி (வியாழன்) இரவு 12 மணிக்கு வாஸ்து சாந்தி,கிராம சாந்தி பூஜை கள் நடைபெ றவுள்ளது. 7 ந் தேதி மதியம் 12 மணிக்கு கொடியே ற்றத்துடன் பூவோடு ஆரம்ப மாகிறது. விழாவின் உச்சகட்ட மாக தேர்த்திருவிழா வரும் 13ந் தேதி(வியா ழக்கிழமை) மாலை 4.15 மணிக்கு நடைபெ றவுள்ளது. மாரியம்மன் கோவில் தேர்த்திரு விழா தொடங்கி யதையடுத்து உடுமலை நகரமே விழா க்கோலம் பூண்டு பரபரப்பாக காணப்ப டுகிறது.

    • மாரியம்மன் கோவில் பங்குனி விழா நடந்தது.
    • ஏற்பாடுகளை டிரஸ்டி லட்சுமணராக்கு சுவாமிகள், செர்டுபாண்டி, போதும் பொண்ணு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறும்.

    விழாவையொட்டி அம்மன் கையில் காப்புகட்டும் பூஜை நடந்தது. நாளை (5-ந்தேதி) திருவிளக்கு பூஜையும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா 6-ந்தேதியும் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, வேல் குத்துதல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி லட்சுமணராக்கு சுவாமிகள், செர்டுபாண்டி, போதும் பொண்ணு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 

    • ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
    • விழாவில் ராஜபாளையம் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பூப்பல்லக்கு, சிம்ம வாகனம் என பல்வேறு அலங்கார வாகனங்களில் திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழாவையொட்டி தீ குண்டம் வளர்க்கப்பட்டது.

    பூக்குழி இறங்கும் பக்தர்கள் மற்றும் பெண்கள் பெண்கள் முளைப்பாரி எடுத்தும், ஆயிரங்கண் பானை எடுத்தும் ஊர்வலமாகச் சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விழாவில் ராஜபாளையம் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    • 5 ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 4ந் தேதி புஸ்ப விமான மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    அவினாசி :

    அவினாசி அருகேயுள்ள கருவலூரில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருகிற 5 ந்தேதி தேரோட்டம் நடக்கி றது. முன்னதாக தேர்த்திரு விழாவின் முக்கிய நிக ழ்வான திருக்கொடி யேற்றம் நிகழ்ச்சி நேற்று கோவிலில் நடந்தது. கோவில் முன்புறமுள்ள கொடிகம்பத்தை தூய்மை ப்படுத்தி சிறப்பு பூஜை நடந்தது.

    இதில் கோவில் அர்ச்சகர் ஹோமமந்திரம் மற்றும் பக்தி பாடல்கள் பாடி மேள வாத்தியம் முழங்க கொடி மரத்தில் கொடியே ற்றப்பட்டது. தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு பூத வாகன காட்சி, 3ந்தேதி இரவு ரிஷப வாகன உலா, 4ந்தேதி புஸ்ப விமான மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    5ந்தேதி அதிகாலை அம்மன் திருத்தேருக்கு எழு ந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று பிற்பகல் 2 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தொடர்ந்து 6, 7-ந் தேதி களில் திருத்தேர் இழுக்க ப்பட்டு நிலை சென்றடை கிறது. 8 ந்தேதி தேர் திருவிழா நிறைவுபெறு கிறது. 9 ந்தேதி காலை 7 மணி அளவில் தரிசனம் நிகழ்ச்சியும் மாலை 3 மணிக்கு அம்பாள் சப்பர த்தில் புறப்பாடு நிகழ்ச்சியும் இரவு 8மணிக்கு மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. 

    • தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ந் தேதி நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாட ப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. அன்று மாலை, 4மணிக்கு அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும், மாலை, 6மணிக்கு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏப்ரல் 4-ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு 12மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந் தேதி மதியம் 1 மணிக்கு கொடியேற்றுதல், மதியம் 2மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி தொடங்கி 11-ந் தேதி இரவு 10மணிக்கு பூவோடு எடுத்தல் நிறைவு பெறுகிறது. 12ந் தேதி அதிகாலை 4மணிக்கு மாவிளக்கு, மாலை 3 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ந் தேதி நடக்கிறது. அன்று காலை 6:45 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4மணிக்கு தேரோ ட்டமும் நடக்கிறது.14-ந் தேதி காலை 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8 மணிக்கு பரிவேட்டை, இரவு 11 மணிக்கு வான வேடிக்கை நிகழ்சிகள் நடக்கிறது.15ந்தேதி காலை 8:15 மணிக்கு கொடியிறக்கம், காலை 11மணிக்கு மகா அபிேஷகம், பகல் 12மணிக்கு மஞ்சள் நீராட்டம், மாலை 7மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    திருவிழா காலங்களில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் தினமும் இரவு 7 மணிக்கு அம்பாள் புஷ்ப அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சிகளும், கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    • 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.
    • வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.

     உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் திருவிழா சுற்றுவட்டார கிராமங்களின் திருவிழாவாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.வரும் 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.இதனையடுத்து ஏப்ரல் 4 ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்குகிறது.விழாவின் உச்ச நிகழ்வான தேர்த்திருவிழா ஏப்ரல் 13 -ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.மேலும் 14 -ந் தேதி இரவு 10 மணிக்கு குட்டை திடலில் வாண வேடிக்கை நடைபெறவுள்ளது.

    அத்துடன் திருவிழா நாட்களில் வருவாய்துறைக்கு சொந்தமான 91 சென்ட் பரப்பளவுள்ள குட்டை திடலில் ராட்டினம்,மரணக்கிணறு உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் ஏராளமான கடைகள் அமைக்கப்படும்.இவ்வாறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்கான உரிமம் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.அந்தவகையில் நடப்பு ஆண்டில் வரும் ஏப்ரல் 7 ந் தேதி முதல் 14ந் தேதி வரை பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்காக குட்டை திடல் ஏலம் வரும் 27 ந் தேதி மதியம் 12 மணிக்கு உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    இந்த ஏலத்துக்காக அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த பட்ச ஏலத்தொகையாக ரூ. 46 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பங்குத்தொகையான ரூ .11 லட்சத்து 50 ஆயிரத்தை அச்சார தொகையாக இன்று காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கேட்பு வரைவோலையாக (டி டி)செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டில் அரசு நிர்ணயித்த தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி பல முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.நடப்பு ஆண்டில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 30 நாட்கள் 30 உபயதாரர்கள் மூலம் நாள்தோறும் தேர் திருவிழா வானது நடைபெற உள்ளது.
    • பாரம்பரிய நடனங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

    ஊட்டி,

    ஊட்டியின் காக்கும் கடவுளாய் திகழும் மாரியம்மன், காளியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆண்டு தோறும் ஊட்டி மாரியம்மன், காளியம்மன் சித்திரை தேர் திருவிழா மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.

    இந்த விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. 30 நாட்கள் 30 உபயதாரர்கள் மூலம் நாள்தோறும் தேர் திருவிழா வானது நடைபெற உள்ளது.

    முதல் நாள் தொடக்கமாக நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கம் சார்பில் முதல் தேர்த் திருவிழா நடந்தது. இதில் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றது. இதை திரளான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

    தேர்த்திருவிழாவில் மாரியம்மன் புலி வாகனத்தில் பூ பல்லக்கில் ஆதிபராசக்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலையில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    ஒக்கலிகர் சங்க நிர்வாகிகள் சதிஷ்குமார்,சதிஷ்,ரவி,மோகன்,கிருஷ்ணன்,வினோத்,அசோக்,பிரகாஷ்,சுமந்த்,சந்தோஷ்,சைலிஷ்,சுரேஷ்,மோகன்,தீப்பு,குமார்,சத்தியநாராய ணன்,மோகன்ராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்சியை சுந்தர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்

    கலைநிகழ்சிக்கான ஏற்பாடுகளை லோகநாதன்,சம்பத்,சிவராஜ்,மோகன்,நாராயணன்,சங்கர்,சீனீ,மோகன்,செந்தில்குமார்,மஞ்சுநாத்,ரவி,சுமந்த்,சந்திப் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

    இதில் நீலகிரி மாவட் டத்தில் உள்ள அனைத்து ஒக்கலிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    • 31-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது.
    • 6, 7-ந் தேதிகளில் தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது.

    அவினாசி :

    கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை 21-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்குகிறது.

    31-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 5-ந் தேதி காலை அதிர்வேட்டு முழங்க அம்மன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது வீற்றிருக்கும் சாமியை தரிசனம் செய்கின்றனர்.

    பின்னர் பிற்பகல் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 6, 7-ந் தேதிகளில் தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது. 8-ந் தேதி பரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. 9-ந் தேதி மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது.

    • ரூ. 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கும்ப கலசத்தில் எழுந்தருளிய மாரியம்மன் சூலத்தேவர் மற்றும் தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டது.

     உடுமலை :

    உடுமலை மாரியம்மன் கோவிலில் இருந்த பழமையான தேருக்குப் பதிலாக எண்கோண வடிவில் மர சிற்ப வேலைப்பாடுகளுடன் 5 நிலைகளைக் கொண்டதாக ரூ. 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த புதிய தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது.அதன்படி காலை 9.45 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தை தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடைபெற்றது. மதியம் 1 மணியளவில் புதிய தேர் கும்ப ப்ரோக்ஷனம்,ஸ்தாபனம்,பலிதானம்,மஹா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் கும்ப கலசத்தில் எழுந்தருளிய மாரியம்மன் சூலத்தேவர் மற்றும் தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்டத்தை பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம்,உடுமலை நகரமன்றத் தலைவர் மத்தீன்,உடுமலை ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன்,பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ் ஸ்ரீதர் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். பக்தி கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பக்தர்களுக்கு உதவியாக தேரை இழுக்க பொக்லைன் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.பொள்ளாச்சி ரோடு,தளி ரோடு,சதாசிவம் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.வழி நெடுக ஏராளமான பக்தர்கள் புதிய தேரை பார்ப்பதிலும் படம் பிடிப்பதிலும் ஆர்வம் காட்டினர்.போலீஸ் சூப்பிரண்டு கோபால கிருஷ்ணன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×